என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
81 வயது முதியவராக விமானத்தில் பயணிக்க பக்கா பிளான்.. -வசமாக சிக்கிய வாலிபர்
Byமாலை மலர்10 Sep 2019 3:41 AM GMT (Updated: 10 Sep 2019 3:41 AM GMT)
டெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு பயணிக்க நினைத்த வாலிபர், விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.
புது டெல்லி:
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இவர் சென்ற விதம்தான் ஆச்சரியத்துக்குரியது.
இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.
இவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கு சற்றும் பொருந்தாத வகையில் அவரது தோளின் தன்மை மிகவும் நன்றாக இருந்தது. 50 வயதைக் கூட தாண்டாத தன்மை கொண்டது.
மேலும் அவர் ஜீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என கூறியுள்ளனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இவர் சென்ற விதம்தான் ஆச்சரியத்துக்குரியது.
இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து தாடி, தலைமுடி என அனைத்தையும் 81 வயது முதியவர் போல தோற்றம் தெரிய வேண்டுமென வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் வீல் சேரில் வந்துள்ளார்.
இவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கு சற்றும் பொருந்தாத வகையில் அவரது தோளின் தன்மை மிகவும் நன்றாக இருந்தது. 50 வயதைக் கூட தாண்டாத தன்மை கொண்டது.
மேலும் அவர் ஜீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X