என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புற்றுநோய் சிகிச்சைக்கு பசு கோமியம் - மத்திய மந்திரி தகவல்
Byமாலை மலர்8 Sep 2019 1:51 PM GMT (Updated: 8 Sep 2019 1:51 PM GMT)
புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
கோயமுத்தூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்வினி குமார் சவுபே, ‘பல வகையான மருந்துகள் தயாரிப்பில் பசுவின் கோமியம் பயன்படுத்தப்படு வருகிறது. புற்றுநோய் போன்ற குணப்படுத்தவே இயலாத நோய்களுக்கான சிகிச்சையிலும் தனிப்பட்ட ரகத்தை சேர்ந்த பசுக்களின் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. இதை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையின் ஆயுஷ் அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது’ என குறிப்பிட்டார்.
பல வேளைகளில் தங்களது நோய் குணமாவதற்காக மக்கள் பசுவின் கோமிடத்தை குடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட இதை வழக்கமாக கொண்டிருந்தார். எனவே, பசுவின் கோமியம் தொடர்பாக அதிகமான ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பாஜக பெண் எம்.பி. சாத்வி பிராக்யா சிங் தாக்குர், ‘மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் பசுவின் கோமியம் கலந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு குணமடைந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
நோய்க்கிருமிகளை கொல்வதில் பசு மாட்டின் கோமியத்துக்கு தனிச்சிறப்பு உள்ளதாக இந்திய மக்கள் கருதி வருகின்றனர். குறிப்பாக, பல ஆண்டுகாலமாக காலையில் பசுவின் கோமியத்தால் முகம் கழுவதை ஆன்மிகம்சார்ந்த நற்காரியங்களில் ஒன்றாக இந்து மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.
பல வேளைகளில் தங்களது நோய் குணமாவதற்காக மக்கள் பசுவின் கோமிடத்தை குடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட இதை வழக்கமாக கொண்டிருந்தார். எனவே, பசுவின் கோமியம் தொடர்பாக அதிகமான ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பாஜக பெண் எம்.பி. சாத்வி பிராக்யா சிங் தாக்குர், ‘மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் பசுவின் கோமியம் கலந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு குணமடைந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X