search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல்
    X
    நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல்

    நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல்- 28 பேர் உயிருடன் மீட்பு

    விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    விசாகப்பட்டினம்:

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், கப்பலில் இருந்த பணியாளர்கள் 29 பேர் உயிரை காக்க கடலில் குதித்தனர்.

    சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் வீரர்கள்


    கடலில் தத்தளித்த அவர்களில் 28 பேரை கடலோர காவல் படை மீட்டது. காணாமல் போன ஒரு பணியாளரை கடலோர காவல் படை தேடி வருகிறது. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    Next Story
    ×