search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் ஆட்டம் போடும் மக்கள்
    X
    வெள்ளத்தில் ஆட்டம் போடும் மக்கள்

    வெள்ளத்தில் ஆட்டம் போடும் மக்கள்.. -வீடியோ வைரல்

    கர்நாடகாவில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த வெள்ளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பிக்கொண்டு இருக்கின்றன. தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சில மக்கள் வெள்ளத்தில் ஆட்டம் போடும் வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

    இதற்கு ஒருவர், 'குழந்தைகள் மழையில் ஆட்டம் போடுவார்கள், ஜாம்பவான்கள் வெள்ளத்தில்தான் ஆடுவார்கள்' எனவும், மற்றொருவர், 'ஆட்டம் போட என்ன இருக்கிறது? அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்' எனவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

    Next Story
    ×