search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தெலுங்கானாவில் லாரி- ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: 12 பேர் பலி

    தெலுங்கானாவில் மெகபூப் நகரில், லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில்  லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில்,12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கோர விபத்தில் படு காயங்களுடன் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து மெகபூப் நகர மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×