என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக ஆனந்திபென் பதவி ஏற்றார்
Byமாலை மலர்29 July 2019 9:01 AM GMT (Updated: 29 July 2019 9:01 AM GMT)
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராக குஜராத் முன்னாள் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார்.
லக்னோ:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராக குஜராத் முன்னாள் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார்.
உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராக குஜராத் முன்னாள் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார்.
உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் 28-வது கவர்னராக குஜராத் முன்னாள் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் பதவி பிரமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், முன்னாள் கவர்னர் ராம் நாயக் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராக பொறுப்பேற்றவர் ஆனந்திபென் என்பதும், வெள்ளையர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படாத காலக்கட்டத்தில் 15-8-1947 முதல் 2-3-1949 வரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஒன்றிணைந்த மாகாணத்தின் கவர்னராக ’கவிக்குயில்’ சரோஜினி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X