என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வரான பின்னர் பிறந்த கிராமத்துக்கு சென்ற எடியூரப்பா - குலதெய்வம் கோவிலில் வழிபாடு
Byமாலை மலர்27 July 2019 8:55 AM GMT (Updated: 27 July 2019 8:55 AM GMT)
நான்காவது முறையாக கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பா இன்று தனது பூர்வீக கிராமத்துக்கு சென்று சித்தலிங்கேஸ்வரா கோவிலில் வழிபாடு செய்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.
அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறையாக பதவியேற்ற எடியூரப்பா இன்று மண்டியா மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான பூக்கனேகேரே-வுக்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய எடியூரப்பா, 'நான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தை பார்ப்பது எனது கடமையாகும்' என்று குறிப்பிட்டார்.
பின்னர், அந்த கிராமத்தில் உள்ள தங்களது மூதாதையர்களின் குலதெய்வமான சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.
அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறையாக பதவியேற்ற எடியூரப்பா இன்று மண்டியா மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான பூக்கனேகேரே-வுக்கு வந்தார்.
பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த எடியூரப்பாவுக்கு அங்கு காவல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் மண்டியா மாவட்ட பாஜக பிரமுகர்கள் சார்பிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய எடியூரப்பா, 'நான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தை பார்ப்பது எனது கடமையாகும்' என்று குறிப்பிட்டார்.
பின்னர், அந்த கிராமத்தில் உள்ள தங்களது மூதாதையர்களின் குலதெய்வமான சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X