search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதிலால் யாதவ்
    X
    மோதிலால் யாதவ்

    கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய தொழிலதிபர்

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து வித்தியாசமான முறையில் தொழிலதிபர் ஒருவர், தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்தவர் மோதிலால் யாதவ். இவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவருக்கு சமீபத்தில் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இதனை மோதிலால் மிகவும் வித்தியாசமாக கொண்டாட விரும்பினார். இதையடுத்து சிறைக்காலம் முடிந்தும் அபராத தொகை செலுத்த முடியாத சிறிய குற்றங்கள் செய்த குற்றவாளிகள் பலர் சிறையில் உள்ளனர்.

    அவர்களை விடுதலை செய்து கொண்டாடுவோம் என எண்ணியுள்ளார். எனவே, அப்படியாக மாவட்ட சிறையில் இருந்த 17 பேருக்காக ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தி மோதிலால், விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

    இது குறித்து மோதிலால் கூறுகையில், 'என் மகன் ஒரு வழக்கறிஞர். சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து அவனிடமே கேட்டு தெரிந்துக் கொண்டேன். இதனால், அப்படிப்பட்ட சிலரை விடுதலை செய்ய நான் பங்களிக்க வேண்டும் என எண்ணினேன்.

    அவர்கள் நிச்சயம் திரும்ப குற்றங்கள் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார். மோதிலாலின் செயல் குறித்து பேசிய சிறைகாவல் கண்காணிப்பாளர், 'மோதிலால் சிறைக்கைதிகளை விடுவித்து பிறந்தநாள் கொண்டாட நினைத்தார். இதற்காக ரூ.35 ஆயிரம் அபராத தொகையை செலுத்தி 17 பேரை விடுதலை செய்துள்ளார்' என கூறினார்.




    Next Story
    ×