search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாத் - ராஜ்நாத் சிங்
    X
    பிரசாத் - ராஜ்நாத் சிங்

    வாங்கிய ரூ.1.08 கோடி சம்பளத்தை மந்திரியிடம் திருப்பிக் கொடுத்த முன்னாள் விமானப்படை வீரர் -காரணம்?

    டெல்லியில் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர், தான் வாங்கிய ரூ.1.08 கோடி சம்பளத்தினை மந்திரியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
    புது டெல்லி:

    இந்திய விமானப்படை வீரராக பணியாற்றியவர் பிரசாத். இவருக்கு ரெயில்வேயில் நல்ல வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனையடுத்து 108 மாதங்கள் விமானப்படையில் பணியாற்றிய நிலையல், ரெயில்வே துறையில் பணியாற்ற விரும்பி இந்த பணியை விடுத்துச் சென்றுள்ளார்.

    அதன்பின்னர் அந்த பணி பிரசாத்துக்கு கிடைக்கவில்லை. இதனால் பணியாற்றி வந்த விமானப்படை பணியும் இல்லாததால், பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார்.

    பண்ணை தொடர்வதற்கான அனைத்து பயிற்சிகளையும் முழுமையாக கற்றுக் கொண்டு அமோக முன்னேற்றம் பெற்றுள்ளார்.  பின்னர், தான் 108 நாள் பணியாற்றி அரசிடம் இருந்துப் பெற்ற ரூ.1.08 கோடியினை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

    இது குறித்து பிரசாத் கூறுகையில், 'விமானப்படையில் 108 மாதங்கள் மட்டுமே பணிப்புரிந்தேன். பண்ணை வைத்ததன் மூலம் நல்ல வருமானம் ஈட்டினேன். எனது குடும்ப கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. எனவே நான் வாங்கிய சம்பளத்தை பாதுகாப்புத்துறைக்கு வழங்க நினைத்தேன். இப்போது கொடுத்துவிட்டேன்' என கூறியுள்ளார்.






    Next Story
    ×