என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரத யாத்திரையில் பங்குப்பெற்று வழிபாடு செய்தார் முஸ்லிம் பெண் எம்.பி
Byமாலை மலர்4 July 2019 9:32 AM GMT (Updated: 4 July 2019 9:38 AM GMT)
பூரியில் உலகப்புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் பெண் எம்.பி நுஸ்ரத் ஜஹான் கலந்துக் கொண்டார்.
கொல்கத்தா:
வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரத், ‘மம்தா பானர்ஜி அவர்கள் எங்கள் அழைப்பை ரம்ஜானுக்கும் வந்துள்ளார். மேலும் எல்லோருடனும் துணையாக இருக்கிறார். இதில் எந்த அரசியலும் இல்லை. இது முற்றிலும் நம்பிக்கையை பொறுத்தது. மதங்களையும், அரசியலையும் கடந்தே நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.
வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது.
பதவி ஏற்பதற்காக நஸ்ரத் பாராளுமன்றத்துக்கு வந்தார். முஸ்லிம் பெண்ணான அவர், குங்குமம் வைத்திருந்ததுடன், தாலி அணிந்திருந்தார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர்.
அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்று ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார். அதற்கு நஸ்ரத் டுவிட்டர் பக்கத்தில், ‘சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான்.
இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணியவேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மத நம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது’ என கூறினார்.
இதையடுத்து பூரி ஜெகநாதர் கோவிலின் ரத யாத்திரையில் பங்கேற்க நுஸ்ரத்துக்கு இஸ்கான் அமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று இன்று நஸ்ரத் இந்த யாத்திரையில் பங்கேற்றார்.
நஸ்ரத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோர் ரத யாத்திரையில் கலந்துக் கொண்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரத், ‘மம்தா பானர்ஜி அவர்கள் எங்கள் அழைப்பை ரம்ஜானுக்கும் வந்துள்ளார். மேலும் எல்லோருடனும் துணையாக இருக்கிறார். இதில் எந்த அரசியலும் இல்லை. இது முற்றிலும் நம்பிக்கையை பொறுத்தது. மதங்களையும், அரசியலையும் கடந்தே நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X