என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட தாய், மகன் சடலம் -லேப்டாப்பில் சிக்கிய குறிப்பு
Byமாலை மலர்25 Jun 2019 6:42 AM GMT (Updated: 25 Jun 2019 6:42 AM GMT)
மும்பையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் தாய், மகன் ஆகியோரின் சடலம் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய குறிப்பு லேப்டாப்பில் சிக்கியுள்ளது.
மும்பை:
மும்பையைச் சேர்ந்தவர் வைகண்டேஷ்வரன்(42). இவரது தாய் மீனாட்சி ஐயர்(75). இருவரும் மும்பையின் மீரா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் 4 நாட்களாக இல்லை.
எனவே, அக்கம் பக்கத்தினர் இருவரும் வெளியூர் சென்றிருப்பார்கள் என நினைத்து இருந்துள்ளனர். பின்னர் மீனாட்சியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மீனாட்சியின் சடலம் குளியல் அறையில் ரத்தத்தில் மிதந்துள்ளது. மகனின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. இதையடுத்து இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பார்களா, அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அருகில் போலீசார் விசாரித்தனர்.
அவரது வீட்டில் ஆதாரம் ஏதும் கிடைக்குமா? என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். வைகண்டேஷ்வரனின் லேப்டாப்பில் குறிப்பு ஒன்று சிக்கியது. இதில், தாயை கொன்றுவிட்டு, தானே தற்கொலை செய்து கொண்டதாக வைகண்டேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வைகண்டேஷ்வரன் இப்படி செய்ய காரணம் என்ன என்பதை விசாரித்து வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்தவர் வைகண்டேஷ்வரன்(42). இவரது தாய் மீனாட்சி ஐயர்(75). இருவரும் மும்பையின் மீரா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் 4 நாட்களாக இல்லை.
எனவே, அக்கம் பக்கத்தினர் இருவரும் வெளியூர் சென்றிருப்பார்கள் என நினைத்து இருந்துள்ளனர். பின்னர் மீனாட்சியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த குடியிருப்புப்பகுதிக்கு விரைந்த போலீசார், வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மீனாட்சி, வைகண்டேஷ்வரன் ஆகியோரின் சடலம் இருந்துள்ளது.
மீனாட்சியின் சடலம் குளியல் அறையில் ரத்தத்தில் மிதந்துள்ளது. மகனின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. இதையடுத்து இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பார்களா, அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அருகில் போலீசார் விசாரித்தனர்.
அவரது வீட்டில் ஆதாரம் ஏதும் கிடைக்குமா? என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். வைகண்டேஷ்வரனின் லேப்டாப்பில் குறிப்பு ஒன்று சிக்கியது. இதில், தாயை கொன்றுவிட்டு, தானே தற்கொலை செய்து கொண்டதாக வைகண்டேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வைகண்டேஷ்வரன் இப்படி செய்ய காரணம் என்ன என்பதை விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X