search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் பெண் நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்
    X

    சத்தீஸ்கரில் பெண் நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு போலீஸ் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பெண் நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள்.

    சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டம் காட்டிகிராம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து சிறப்பு போலீஸ் படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சிறப்பு போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    போலீசார் நடத்திய தாக்குதலில் பெண் நக்சலைட்டு குண்டு பாய்ந்து பலியானார்.

    தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
    Next Story
    ×