search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் சகோதரிகள் கற்பழிப்பு
    X

    உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் சகோதரிகள் கற்பழிப்பு

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் துப்பாக்கி முனையில் மிரட்டி சகோதரிகளை கற்பழித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தில் சகோதரிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.

    அவர்களுக்கு 13 மற்றும் 15 வயது இருக்கும். அப்போது 4 பேர் கும்பல் சகோதரிகளை வழிமறித்தது.

    அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி இருவரையும் கற்பழித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். சிறுமிகளை பலாத்காரம் செய்த 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உ.பி.யில் சமீபகாலமாக சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.


    மத்திய பிரதேச மாநிலம் சிங்குருளி மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 மற்றும் 16 வயது வரை இருக்கும். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×