என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக்கிய கட்சிகள் புறக்கணிப்பு எதிரொலி - காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு
Byமாலை மலர்12 Sep 2018 4:20 AM GMT (Updated: 12 Sep 2018 4:20 AM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருப்பதால், தேர்தலை ஒத்திவைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #JammuAndKashmir #JKLocalBodyPolls
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.
ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகள் இரண்டும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரும் ஜனவரி வரை ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையிலான மாநில ஆலோசனைக் கவுன்சில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்க மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் பிடிபி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியதையடுத்து, ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #JKLocalBodyPolls
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.
தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகள் இரண்டும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரும் ஜனவரி வரை ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையிலான மாநில ஆலோசனைக் கவுன்சில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்க மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் பிடிபி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியதையடுத்து, ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #JKLocalBodyPolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X