என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்கள் 4 பேர் பலி
Byமாலை மலர்2 Sep 2018 5:08 PM GMT (Updated: 2 Sep 2018 5:08 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலம், நாராயன்பூர் மாவட்டத்தில் ரிசர்வ் படையினருக்கும் நக்சல் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் நக்சலைட்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #ChhattisgarhNaxals
ராய்பூர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள குமியபேடா கிராமத்தில் சில நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரிசர்வ் படையினர் அந்த கிராமத்தை இன்று முற்றுகையிட்டு இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரிசர்வ் படையினரை நோக்கி மறைந்திருந்த நக்சலைட்கள் துப்பாக்கியால் சுட்டதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது, இதில் நக்சலைட்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக நாரான்பூர் போலீஸ் எஸ்.பி சுக்லா கூறினார்
சுட்டுக்கொள்ளப்பட்ட 4 பேரில் ஏற்கெனவே தலைக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் அடக்கம் என அவர் மேலும் தெரிவித்தார். #ChhattisgarhNaxals
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள குமியபேடா கிராமத்தில் சில நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரிசர்வ் படையினர் அந்த கிராமத்தை இன்று முற்றுகையிட்டு இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரிசர்வ் படையினரை நோக்கி மறைந்திருந்த நக்சலைட்கள் துப்பாக்கியால் சுட்டதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது, இதில் நக்சலைட்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக நாரான்பூர் போலீஸ் எஸ்.பி சுக்லா கூறினார்
சுட்டுக்கொள்ளப்பட்ட 4 பேரில் ஏற்கெனவே தலைக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் அடக்கம் என அவர் மேலும் தெரிவித்தார். #ChhattisgarhNaxals
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X