search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து பிரதமர்கள் அருங்காட்சியகமாக மாறும் தீன் மூர்த்தி பவன்
    X

    அனைத்து பிரதமர்கள் அருங்காட்சியகமாக மாறும் தீன் மூர்த்தி பவன்

    தீன் மூர்த்தி பவன் அனைத்து பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.#TeenMurtiBhavan

    புதுடெல்லி:

    டெல்லியில் ஜனாதிபதி மாளிகையையொட்டி அமைந்துள்ளது தீன்மூர்த்தி பவன்.

    நேரு பிரதமராக இருந்த போது, 16 ஆண்டுகள் இந்த மாளிகையில்தான் வசித்து வந்தார். அவர் மறைவுக்கு பிறகு தீன்மூர்த்தி பவன் நேரு நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. மேலும் அங்கு நூலகமும் செயல்பட்டு வந்தது.

    இந்த மாளிகை 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 1930-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது கட்டப்பட்டது.

    முதலில் ராணுவ தலைமை தளபதியின் மாளிகையாக இருந்தது. சுதந்திரத்துக்கு பிறகு நேரு பிரதமராக பதவி ஏற்றதும் அவரது இல்லமாக மாறியது.

    தற்போது தீன்மூர்த்தி பவன் அனைத்து முன்னாள் பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

     


    நேருவில் இருந்து மோடி வரை உள்ள அனைத்து பிரதமர்களின் முக்கிய நிகழ்வுகளும் காட்சியகத்தில் இடம்பெறும் வகையில் அருங்காட்சியமாக அமைக்க உள்ளனர்.

    அதன்படி ஒவ்வொரு பிரதமரின் ஆட்சிகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இடம் பெறும். இதில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எமர்ஜென்சி, பின்னர் அவர் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட பொற்கோவில் ‘புளூஸ்டார் ஆபரேசன்’ போன்றவையும் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது சம்பந்தமாக நேரு அருங்காட்சியக டைரக்டர் சக்தி சின்கா கூறும்போது, இந்திரா காந்தியை பற்றி குறிப்பிடும் போது, அவர் கொண்டு வந்த எமர்ஜென்சி, புளூஸ்டார் ஆபரேசன் போன்றவற்றை விட்டு விட்டு மற்றவற்றை மட்டும் காட்சிப்படுத்த முடியாது. எனவே, அதுவும் இடம்பெறும் என்று கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் காட்சியகத்தில் இடம் பெறுமா? என்று கேட்டதற்கு எந்தவொரு பிரதமருடைய திட்டங்களையும் நாங்கள் மறைக்க மாட்டோம். அனைத்தும் இடம்பெறும்.

    மேலும் தேவேகவுடா, சரண்சிங், சந்திரசேகர், வாஜ்பாய், மன்மோகன்சிங் என அனைவருடைய ஆட்சி காலத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் நிச்சயமாக இடம் பெறும் என்று கூறினார்.

    Next Story
    ×