search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை குற்றத்தில் கைதான பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் மீது புகார்
    X

    கொலை குற்றத்தில் கைதான பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் மீது புகார்

    குஜராத்தில் கொலை குற்றத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தன்னை போலீஸ்காரர் கற்பழித்ததாக புகார் கூறியுள்ளார்.
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலம், மகிசாகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது காதலரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சிறையில் இருந்த தன்னை போலீஸ் கான்ஸ்டபில் ஒருவர் கற்பழித்ததாக அவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அம்மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உஷா ராதா கூறுகையில், சர்வதேச சிறைக்கைதிகள் நீதி தினத்தை முன்னிட்டு சாந்தம்பூர் சிறைச்சாலையை நேற்று பார்வையிட சென்றேன். அப்போது, பெண் கைதி ஒருவர் சிறையில் தன்னை போலீஸ் கான்ஸ்டபில் கற்பழித்ததாக புகார் அளித்தார்.

    கொலை வழக்கு குறித்த விசாரனைக்காக உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருந்த அவர் கடந்த மே மாதம் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் பெண் துணை ஆய்வாளர் அடங்கிய குழு இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் என உஷா ராதா தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் மீதும் பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×