search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கனமழை - சென்னையில் இருந்து கொச்சி செல்லும் 2 விமானங்கள் ரத்து
    X

    கேரளாவில் கனமழை - சென்னையில் இருந்து கொச்சி செல்லும் 2 விமானங்கள் ரத்து

    கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்ல இருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    இந்நிலையில், கனமழை காரணமாக அம்மாநிலத்தின் கொச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுவதாக கொச்சி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #KeralaRains
    Next Story
    ×