search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்
    X

    மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்

    கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி பெண் போலீஸ் யசோதா உணவளித்து பாதுகாத்து வரும் சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் யசோதா. இவர் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு குரங்கு மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து உயிருக்காக போராடி கொண்டிருந்தது. அதனை கண்ட யசோதா குரங்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் யசோதா குரங்கை தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு குரங்கை பராமரித்து வந்தனர். தற்போது குரங்கு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    குரங்கு தற்போது தன்னுடைய வீட்டில் ஒரு செல்ல குழந்தையாக மாறி விட்டதாக யசோதா தெரிவித்தார். யசோதாவின் இந்த கருணை குணம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×