search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொம்மை துப்பாக்கியால் சுட்ட மகள் - படுகாயமடைந்த தாய்
    X

    பொம்மை துப்பாக்கியால் சுட்ட மகள் - படுகாயமடைந்த தாய்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நிஜ துப்பாக்கியை பொம்மை துப்பாக்கி என நினைத்து மகள் சுட்டதில் தாய் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #toypistol
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கானாகுல் பகுதியை சேர்ந்த காகோலி ஜனா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துள்ளார். இது பொம்மை துப்பாக்கி என்று நினைத்து தனது மகளிடம் கொடுத்துள்ளார். அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிய சிறுமி தனது தாயை பார்த்து துப்பாகியால் சுட்டார். அந்த துப்பாக்கியில் இருந்த தோட்டா தாயின் உடம்புக்குள் பாய்ந்தது.

    இதனால் தாய் காகோலி ஜனா பலத்த காயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த சிறுமி மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடப்பது வழக்கம். அமெரிக்காவில் சுலபமாக துப்பாக்கி உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில், அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. மேலும் இந்தியாவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் இச்சம்பவத்தில் துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #toypistol
    Next Story
    ×