search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்- தடுக்க வந்த தாய் மீது தாக்குதல்
    X

    உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்- தடுக்க வந்த தாய் மீது தாக்குதல்

    உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய சிறுமிக்கு 3 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #girlharassed
    முசாபர்நகர்:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய 16 வயது சிறுமியை 3 இளைஞர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் தாய் அங்கு சென்று, இளைஞர்களை தடுத்து எச்சரித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சிறுமியின் தாயை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த 3 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். #girlharassed
    Next Story
    ×