என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி கடன் மோசடியில் தொடர்புடையவர்களின் ரூ.17 ஆயிரம் கோடி சொத்துகள் அவசர சட்டத்தில் பறிமுதல்
Byமாலை மலர்24 April 2018 6:53 PM GMT (Updated: 24 April 2018 6:53 PM GMT)
வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடியில் தொடர்புடையவர்களின் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். இது போன்று வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை தண்டிக்க பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்துக்கு கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
ஏற்கனவே விஜய் மல்லையாவின் ரூ.9 ஆயிரத்து 890 கோடி சொத்துகளையும், நிரவ் மோடியின் ரூ.7 ஆயிரத்து 664 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறையால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் புதிய அவசர சட்டத்தின்படி விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மட்டும் அல்லாமல் வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் மற்றும் இந்தியாவில் இருப்பவர்களின் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். இது போன்று வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை தண்டிக்க பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்துக்கு கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
ஏற்கனவே விஜய் மல்லையாவின் ரூ.9 ஆயிரத்து 890 கோடி சொத்துகளையும், நிரவ் மோடியின் ரூ.7 ஆயிரத்து 664 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறையால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் புதிய அவசர சட்டத்தின்படி விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மட்டும் அல்லாமல் வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் மற்றும் இந்தியாவில் இருப்பவர்களின் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X