என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டெல்லி ராம்லீலா விழாவில் போலீசாருடன் நடனம் ஆடிய பெண் சாமியார்
Byமாலை மலர்6 Oct 2017 12:20 AM IST (Updated: 6 Oct 2017 12:20 AM IST)
டெல்லியில் ராம்லீலா விழாவுக்கு சென்ற பெண் சாமியாரான ராதே மா விவேக் விகார் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு இன்ஸ்பெக்டர் அமரும் இருக்கை அமர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுடெல்லி:
மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் பெண் சாமியாரான ராதே மா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைகளின் ராணியாக வலம் வரும் இவர், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த ராம்லீலா விழாவுக்கு சென்ற இவர், போகும் வழியில் விவேக் விகார் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்குள்ள கழிவறையை பயன்படுத்தினார். பின்னர் அங்கு இன்ஸ்பெக்டர் அமரும் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா நிற்கும் புகைப்படங்களை பின்னர் தனது ‘பேஸ்புக்’ தளத்தில் அவர் பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஜி.டி.பி. பகுதியில் நடந்த ராம்லீலா விழாவில் பங்கேற்ற ராதே மா, அங்கு துணை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசாருடன் நடனம் ஆடினார். இதையும் வீடியோ எடுத்து பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு இருந்தார். சர்ச்சைக்குரிய சாமியாருக்கு சலுகை வழங்கியும், அவருடன் களியாட்டத்திலும் ஈடுபட்ட போலீசாரின் செயல் உயர் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா மற்றும் 5 போலீசார் மீது கூடுதல் துணை கமிஷனர் ரேங்க் அதிகாரி ஒருவர் விசாரணையை தொடங்கி உள்ளார்.
மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் பெண் சாமியாரான ராதே மா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைகளின் ராணியாக வலம் வரும் இவர், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த ராம்லீலா விழாவுக்கு சென்ற இவர், போகும் வழியில் விவேக் விகார் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்குள்ள கழிவறையை பயன்படுத்தினார். பின்னர் அங்கு இன்ஸ்பெக்டர் அமரும் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா நிற்கும் புகைப்படங்களை பின்னர் தனது ‘பேஸ்புக்’ தளத்தில் அவர் பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஜி.டி.பி. பகுதியில் நடந்த ராம்லீலா விழாவில் பங்கேற்ற ராதே மா, அங்கு துணை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசாருடன் நடனம் ஆடினார். இதையும் வீடியோ எடுத்து பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு இருந்தார். சர்ச்சைக்குரிய சாமியாருக்கு சலுகை வழங்கியும், அவருடன் களியாட்டத்திலும் ஈடுபட்ட போலீசாரின் செயல் உயர் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா மற்றும் 5 போலீசார் மீது கூடுதல் துணை கமிஷனர் ரேங்க் அதிகாரி ஒருவர் விசாரணையை தொடங்கி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X