என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் பஸ்-டிராக்டர் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்4 April 2017 4:13 PM GMT (Updated: 4 April 2017 4:13 PM GMT)
ஒடிசா மாநிலத்தில் டிராக்டரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் ராய்ரங்பூரில் இருந்து இன்று ஜசிப்பூர் நோக்கி சுமார் 15 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கேரானா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் ராய்ரங்பூரில் இருந்து இன்று ஜசிப்பூர் நோக்கி சுமார் 15 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கேரானா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X