என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு
Byமாலை மலர்25 March 2017 1:06 PM GMT (Updated: 25 March 2017 1:06 PM GMT)
கோவா மாநிலத்தில் பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனாஜி:
கோவா மாநிலம் காலன்குட் கடற்கரை பகுதியில் உள்ள ஜிம் ஒன்றிற்கு பிரிட்டனைச் சேர்ந்த பால் ஜெரார்டு அட்கின்சன் (வயது 58) என்பவர் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக வந்துள்ளார். உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்த அவரை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மரணடைந்த நபர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இங்கிலாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காலன்குட் மடோவடோ பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த முதியவர் மரணமடைந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம் காலன்குட் கடற்கரை பகுதியில் உள்ள ஜிம் ஒன்றிற்கு பிரிட்டனைச் சேர்ந்த பால் ஜெரார்டு அட்கின்சன் (வயது 58) என்பவர் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக வந்துள்ளார். உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்த அவரை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மரணடைந்த நபர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இங்கிலாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காலன்குட் மடோவடோ பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த முதியவர் மரணமடைந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X