என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணிப்பூரில் பா.ஜ.க. அலுவலகத்தை சூறையாடிய மாணவர்கள்
Byமாலை மலர்1 March 2017 2:13 PM GMT (Updated: 1 March 2017 2:13 PM GMT)
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அலுவலகத்தை மாணவர்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால்:
மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 60 தொகுதிகளுக்கான இத்தேர்தல் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரை சேர்ந்த கே.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பு, இம்பாலில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தை இன்று சூறையாடியது. முன்னதாக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க வேண்டுமென்று அலுவலகத்தின் கேட் அருகே நின்று கொண்டு அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் தலைவர்கள் யாரும் மாணவர்களுடன் பேச முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த மாணவர்கள் அலுவலகத்தின் பர்னிச்சர்கள், கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தெறிந்தனர். பின்னர் கோஷமிட்டபடி அவ்விடத்தை விட்டு அவர்கள் வெளியேறினர்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியதாக இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மணிப்பூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 60 தொகுதிகளுக்கான இத்தேர்தல் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரை சேர்ந்த கே.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பு, இம்பாலில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தை இன்று சூறையாடியது. முன்னதாக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க வேண்டுமென்று அலுவலகத்தின் கேட் அருகே நின்று கொண்டு அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் தலைவர்கள் யாரும் மாணவர்களுடன் பேச முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த மாணவர்கள் அலுவலகத்தின் பர்னிச்சர்கள், கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தெறிந்தனர். பின்னர் கோஷமிட்டபடி அவ்விடத்தை விட்டு அவர்கள் வெளியேறினர்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியதாக இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மணிப்பூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X