என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தானேயில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்
Byமாலை மலர்1 March 2017 2:20 AM GMT (Updated: 1 March 2017 2:20 AM GMT)
தானேயில் இருவேறு இடங்களில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே:
மராட்டிய மாநிலம் தானே, ஜாம்பளிநாக்கா சாலையில் சம்பவத்தன்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஒரு காரில் தடை செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.46 லட்சம் பழைய நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த தயாசங்கர் யாதவ் (வயது 28), மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த பங்கஜ் கோயல் (40), காட்கோபர் பகுதியை சேர்ந்த சுனிக் முத்துராஜ் (29) என்பது தெரியவந்தது.
இதேபோல நேற்று தானே குற்றப்பிரிவு போலீசார் தானே கோல்டன் டைஜ்நாக்கா மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவரது பையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மும்பை கஞ்சூர்மார்க்கை சேர்ந்த சேத்தன் சாதுசிங் (36) என்பது தெரியவந்தது.
இந்த 2 சம்பவங்களிலும் கைதான 4 பேரும் பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
மராட்டிய மாநிலம் தானே, ஜாம்பளிநாக்கா சாலையில் சம்பவத்தன்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஒரு காரில் தடை செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.46 லட்சம் பழைய நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த தயாசங்கர் யாதவ் (வயது 28), மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த பங்கஜ் கோயல் (40), காட்கோபர் பகுதியை சேர்ந்த சுனிக் முத்துராஜ் (29) என்பது தெரியவந்தது.
இதேபோல நேற்று தானே குற்றப்பிரிவு போலீசார் தானே கோல்டன் டைஜ்நாக்கா மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவரது பையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மும்பை கஞ்சூர்மார்க்கை சேர்ந்த சேத்தன் சாதுசிங் (36) என்பது தெரியவந்தது.
இந்த 2 சம்பவங்களிலும் கைதான 4 பேரும் பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X