என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான நிலஅதிர்வு
Byமாலை மலர்11 Feb 2017 6:39 PM GMT (Updated: 11 Feb 2017 6:39 PM GMT)
ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.
புதுடெல்லி:
ஸ்ரீநகர், உத்தரகாண்டின் கார்வால் உள்ளிட்ட வடமாநிலங்களின் ஒரு சில இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகிய இந்த நிலஅதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வானது, நேற்று இரவு சுமார் 10:52 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலஅதிர்வை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
முன்னதாக கடந்த திங்களன்று வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலஅதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியதாக தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு செயலகம் தெரிவித்தது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர், உத்தரகாண்டின் கார்வால் உள்ளிட்ட வடமாநிலங்களின் ஒரு சில இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகிய இந்த நிலஅதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வானது, நேற்று இரவு சுமார் 10:52 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலஅதிர்வை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
முன்னதாக கடந்த திங்களன்று வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலஅதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியதாக தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு செயலகம் தெரிவித்தது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X