என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி: லாரி மீது பைக் மோதி இருவர் பரிதாப பலி
Byமாலை மலர்29 Jan 2017 11:21 AM GMT (Updated: 29 Jan 2017 11:26 AM GMT)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிர் தப்பியது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள டெல்லி- டோராடூன் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று கம்ஹெடா கிராமத்தைச் சேர்ந்த துஷ்யந்த் (20), அவரது அத்தை மனோஜ் தேவி (35) தேவியின் குழந்தை ஆகியோர் பைக்கில் பானத் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பைக் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது திடீரென மோதியது. மோதிய வேகத்தில் பைக் தூக்கி வீசப்பட்டதால், பைக்கில் இருந்த இருவரும் பரிதாபமாக பலியாயினர். படுகாயத்துடன் குழந்தை உயிர் தப்பியது.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X