என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது: அரசு அளிக்கும் குருதட்சணையா? - உத்தவ் தாக்கரே ஆவேசம்
Byமாலை மலர்27 Jan 2017 6:51 AM GMT (Updated: 27 Jan 2017 6:51 AM GMT)
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசின் மிக உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்வான பல்துறை பிரபலங்களின் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
நான் அரசியல் வாழ்வில் நுழைந்தபோது எனக்கு சரத் பவார் உதவியாக இருந்தார் என பிரதமர் நரேந்திர மோடி முன்னர் குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
குர்கான் நகரில் சிவசேனா கட்சி தொண்டர்கள் இடையே நேற்று பேசிய உத்தவ் தாக்கரே, தற்போது, விருதுகள் வடிவிலும் குருதட்சணை செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசின் மிக உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்வான பல்துறை பிரபலங்களின் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
நான் அரசியல் வாழ்வில் நுழைந்தபோது எனக்கு சரத் பவார் உதவியாக இருந்தார் என பிரதமர் நரேந்திர மோடி முன்னர் குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
குர்கான் நகரில் சிவசேனா கட்சி தொண்டர்கள் இடையே நேற்று பேசிய உத்தவ் தாக்கரே, தற்போது, விருதுகள் வடிவிலும் குருதட்சணை செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X