என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க. கூட்டணிக்கு 360 இடங்கள் கிடைக்கும்
Byமாலை மலர்27 Jan 2017 1:21 AM GMT (Updated: 27 Jan 2017 1:21 AM GMT)
தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றி பெறும் என்றும் மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்தமானவர் என்றும் கருத்துக் கணிப்பு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.
ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் பா.ஜ.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே மற்றும் கர்வி இன்சைட்ஸ் எம்.ஓ.டி.என் சார்பில் இந்த அரசியல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
கருத்துக் கணிப்பில் சில முக்கிய அம்சங்கள்:-
மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்தமானவர் என்று 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பதவி வகித்துள்ள பிரதமர்களிலே மோடி தான் சிறந்த பிரதமர்.
பண மதிப்பிழக்க நடவடிக்கையை 80 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். 51 சதவீதம் பேர் பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பலனை விட வலியே அதிகம் என்று கூறியுள்ளனர்.
ராகுல்காந்திக்கு 10 சதவீதம் ஓட்டுகளே கிடைக்கும். மூன்றாவது அணியை வழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்தவர் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.
ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் பா.ஜ.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே மற்றும் கர்வி இன்சைட்ஸ் எம்.ஓ.டி.என் சார்பில் இந்த அரசியல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
கருத்துக் கணிப்பில் சில முக்கிய அம்சங்கள்:-
மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்தமானவர் என்று 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பதவி வகித்துள்ள பிரதமர்களிலே மோடி தான் சிறந்த பிரதமர்.
பண மதிப்பிழக்க நடவடிக்கையை 80 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். 51 சதவீதம் பேர் பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பலனை விட வலியே அதிகம் என்று கூறியுள்ளனர்.
ராகுல்காந்திக்கு 10 சதவீதம் ஓட்டுகளே கிடைக்கும். மூன்றாவது அணியை வழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்தவர் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X