என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்: மோடி சொல்கிறார்
Byமாலை மலர்4 Dec 2016 12:15 AM GMT (Updated: 4 Dec 2016 12:15 AM GMT)
‘வாட்ஸ் அப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் மெஷின்’ வைத்துக்கொள்கிற நிலை உருவாகி இருப்பதாக மோடி சுட்டிக்காட்டி பேசினார்.
மொரதாபாத்:
உத்தரபிரதேச மாநிலத்தில் மொரதாபாத்தில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டு மக்கள் அனைவரும் ரொக்க பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு மாற வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
தனது கருத்துக்கு வலு சேர்க்க அவர் ‘வாட்ஸ் அப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் மெஷின்’ வைத்துக்கொள்கிற நிலை உருவாகி இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் குறிப்பிடும்போது, “இது எத்தனை தூரத்துக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பிச்சைக்காரனிடம் ஒருவர், ‘உனக்கு உதவத்தாம்பா எனக்கும் விருப்பம். ஆனால் என்கிட்ட சில்லரை இல்லியே?’ என்கிறார். அதற்கு அந்த பிச்சைக்காரர், ‘ஐயா, கவலையே படாதீங்க’ என்று சொல்லி, ‘ஸ்வைப் மெஷின்’ ஒன்றை அவரிடம் நீட்டி, ‘டெபிட் கார்டை கொடுங்க’ என்று கேட்கிறார்” என கூறினார்.
மோடி சொன்னதைக் கேட்டு, கூட்டத்தில் பங்கேற்றிருந்த மக்கள் அனைவரும் சிரித்தார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X