search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    பஞ்சாப் சிறை உடைப்பில் தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் டெல்லியில் கைது

    பஞ்சாப் மாநிலத்தில் நேற்று போலீஸ் சீருடையில் வந்த மர்மநபர்கள் நாபா சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி விடுவித்துச் சென்ற காலிஸ்தான் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறைச்சாலையில் மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றுகாலை போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் சிறை காவலர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால் சிறை காவலர்கள் நிலைகுலைந்தனர்.

    இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ உள்பட ஆறுபேர் சிறையில் இருந்து தப்பியோடி விட்டனர்.  

    நாபா சிறை உடைப்பு சம்பவத்தின் எதிரொலியாக மாநில சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் பணியிடை நீக்கம் செய்தும், நாபா சிறைச்சாலையின் சூப்பிரண்ட் மற்றும் துணை சூப்பிரண்ட் ஆகியோர் பணியில் இருந்து நீக்கியும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது.

    தப்பியோடிய ஆறுபேரையும் தேடி, கண்டுபிடித்து, கைது செய்ய மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் மேலும் ஐந்துபேரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×