என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை யாத்திரைக்கு சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலி
Byமாலை மலர்27 Nov 2016 7:54 AM GMT (Updated: 27 Nov 2016 7:54 AM GMT)
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில பெண்கள் சபரிமலையில் இருக்கும் ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் இருந்தனர். யாத்திரையை முடித்துவிட்டு சபரிமலையில் இருந்து ஒரு ஜீப்பில் திருவனந்தபுரம் நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை இங்குள்ள நிலக்கல் என்ற இடத்தின் வழியாக சென்றபோது, எதிர்திசையில் வந்த அரசு பஸ், அந்த ஜீப்பின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரஸ்வதியம்மா(55), சரோஜினியம்மா(53) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்று தெரியவந்துள்ளது.
இதேவிபத்தில் காயமடைந்த கிரிஜா(52), அம்பிகா(50) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இவ்விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள சபரிமலை போலீசார், சரஸ்வதியம்மா மற்றும் சரோஜினியம்மா ஆகியோரின் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில பெண்கள் சபரிமலையில் இருக்கும் ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் இருந்தனர். யாத்திரையை முடித்துவிட்டு சபரிமலையில் இருந்து ஒரு ஜீப்பில் திருவனந்தபுரம் நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை இங்குள்ள நிலக்கல் என்ற இடத்தின் வழியாக சென்றபோது, எதிர்திசையில் வந்த அரசு பஸ், அந்த ஜீப்பின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரஸ்வதியம்மா(55), சரோஜினியம்மா(53) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்று தெரியவந்துள்ளது.
இதேவிபத்தில் காயமடைந்த கிரிஜா(52), அம்பிகா(50) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இவ்விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள சபரிமலை போலீசார், சரஸ்வதியம்மா மற்றும் சரோஜினியம்மா ஆகியோரின் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X