search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான ஜே.என்.யு. மாணவரை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: டெல்லி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    மாயமான ஜே.என்.யு. மாணவரை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: டெல்லி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    மாயமான ஜே.என்.யு. மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்னும் மாணவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை.

    இதையடுத்து, காணாமல்போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாயமான மாணவரை போலீஸ் சிறப்புக்குழு அமைத்து தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். இருப்பினும் 35 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மாணவர் நஜீப் கிடைக்கவில்லை.

    இதனிடையே, தன்னுடைய மகன் மாயமானது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நஜீப்பின் தாயார் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது, மாயமான ஜே.என்.யு. மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோல், மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×