என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவர் மாயமான விவகாரம்: உள்துறை அமைச்சகம் முன்பு ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம்
Byமாலை மலர்22 Oct 2016 12:09 AM GMT (Updated: 22 Oct 2016 12:09 AM GMT)
மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகம் முன்பு ஜே.என்.யு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்த சனிக்கிழமை மாயமானார். அவரை முன்தினம் இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை கண்டுபிடிக்கக்கோரி கடந்த 6 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று உள்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஜே.என்.யு. பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகளை அறையில் வைத்து நிர்வாக கட்டிடத்தை பூட்டி மாணவர்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
இது குறித்து மாணவர் அமைப்பு தலைவன் மோகித் பாண்டே கூறுகையில், “ஏழு நாட்கள் ஆகி விட்டது. நஜீப் குறித்து எந்த தகவலும் இல்லை. நஜீப், விடுதியின் மூத்த காப்பாளர், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு தாக்கப்பட்டார்.
தாக்கிய மாணவர்கள் குறித்து பார்த்த மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் சுதந்திரமாக பல்கலைக் கழக வளாகத்தில் உலாவுகின்றனர்” என்றார்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80-100 மாணவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்த சனிக்கிழமை மாயமானார். அவரை முன்தினம் இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை கண்டுபிடிக்கக்கோரி கடந்த 6 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று உள்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஜே.என்.யு. பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகளை அறையில் வைத்து நிர்வாக கட்டிடத்தை பூட்டி மாணவர்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
இது குறித்து மாணவர் அமைப்பு தலைவன் மோகித் பாண்டே கூறுகையில், “ஏழு நாட்கள் ஆகி விட்டது. நஜீப் குறித்து எந்த தகவலும் இல்லை. நஜீப், விடுதியின் மூத்த காப்பாளர், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு தாக்கப்பட்டார்.
தாக்கிய மாணவர்கள் குறித்து பார்த்த மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் சுதந்திரமாக பல்கலைக் கழக வளாகத்தில் உலாவுகின்றனர்” என்றார்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80-100 மாணவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X