என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திக்விஜய் சிங் அவதூறு வழக்கு: மத்திய மந்திரி உமா பாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது போபால் நீதிமன்றம்
Byமாலை மலர்29 Sep 2016 10:36 AM GMT (Updated: 29 Sep 2016 10:36 AM GMT)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய மந்திரி உமா பாரதிக்கு எதிராக போபால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
போபால்:
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரூ. 15,000 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஊழலில் ஈடுபட்டதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக உமாபாரதி மீது திக்விஜய் சிங் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை மத்திய பிரதேச மாநில போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திக்விஜய் சிங் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் போபால் நீதிமன்றம் உமா பாரதிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் உமாபாரதி என்னிடம் மன்னிப்பு கேட்டால் அவர் மீது நான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற்று விடுவேன் என்று திக்விஜய் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரூ. 15,000 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஊழலில் ஈடுபட்டதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக உமாபாரதி மீது திக்விஜய் சிங் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை மத்திய பிரதேச மாநில போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திக்விஜய் சிங் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் போபால் நீதிமன்றம் உமா பாரதிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் உமாபாரதி என்னிடம் மன்னிப்பு கேட்டால் அவர் மீது நான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற்று விடுவேன் என்று திக்விஜய் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X