என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
26 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சேர்ந்தவரின் முதல் பயணமாக ராகுல் காந்தி அயோத்தி சென்றார்
Byமாலை மலர்9 Sep 2016 6:41 AM GMT (Updated: 9 Sep 2016 6:41 AM GMT)
நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று அயோத்தி சென்றார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாதயாத்திரை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார்.
பைசாபாத் நகரில் யாத்திரையை தொடங்கவுள்ள அவர், இன்று காலை அயோத்தி நகருக்கு சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற அனுமன் கார்கி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் கடந்த 26 ஆண்டுகளாக அயோத்தி நகருக்கு சென்றதில்லை. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1990-ம் ஆண்டு அயோத்திக்கு செல்வதாக இருந்தது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அயோத்தி நகருக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தார்.
‘20 ஆண்டுகளுக்கு மேலாக அயோத்திக்கு வராத நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்போது இங்கு வந்துள்ளது தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும்தான்’ என்று ராகுல் காந்தி சென்றிருந்த கோவிலின் வெளியில் பல ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாதயாத்திரை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார்.
பைசாபாத் நகரில் யாத்திரையை தொடங்கவுள்ள அவர், இன்று காலை அயோத்தி நகருக்கு சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற அனுமன் கார்கி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் கடந்த 26 ஆண்டுகளாக அயோத்தி நகருக்கு சென்றதில்லை. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1990-ம் ஆண்டு அயோத்திக்கு செல்வதாக இருந்தது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அயோத்தி நகருக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தார்.
‘20 ஆண்டுகளுக்கு மேலாக அயோத்திக்கு வராத நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்போது இங்கு வந்துள்ளது தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும்தான்’ என்று ராகுல் காந்தி சென்றிருந்த கோவிலின் வெளியில் பல ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X