search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோலிய இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும்: நிதின் கட்காரி
    X

    பெட்ரோலிய இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும்: நிதின் கட்காரி

    பெட்ரோலியத்தை முற்றிலும் இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நிதி ஆயோக் சார்பில் மெத்தனால் பொருளாதாரம் தொடர்பான மாநாட்டு நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அப்போது, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று அவர் பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வந்தாலும் அவற்றை இறக்குமதி செய்வதற்கு ரூ.4.7 லட்சம் கோடி வரை இந்தியா தற்போது செலவழித்து வருகின்றது.

    பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி (இயற்கை எரிவாயு), நிலக்கரி போன்ற எரிபொருட்கள் பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. இதன்மூலம் கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத்துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

    மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் சரிவுகளை சந்தித்து வரும் சமூக பொருளாதார சூழ்நிலை மற்றும் விவசாய தொழில்களை மேம்படுத்தலாம். கிராம மக்கள் மற்றும் விவசாயத்தை பாதுகாப்பதற்கு மாற்றுவழியை நாடுவதற்கான நேரம் இதுவாகும்.

    பெட்ரோலியத்திற்கு மாற்றாக இயற்கை எரிபொருட்களை ஊக்குவித்தால், பெட்ரோலித்தை இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×