என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் காயம்
Byமாலை மலர்19 Aug 2016 12:56 PM GMT (Updated: 19 Aug 2016 12:56 PM GMT)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கர்னாஹ் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இன்று வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த சண்டையில் பாதுகாப்பு படையின் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வதற்காக கூடுதல் படைகள் விரைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கர்னாஹ் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இன்று வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த சண்டையில் பாதுகாப்பு படையின் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வதற்காக கூடுதல் படைகள் விரைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X