என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் அனல்மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Byமாலை மலர்7 Aug 2016 11:13 AM GMT (Updated: 7 Aug 2016 11:13 AM GMT)
தெலுங்கானாவில் ’அனைவருக்கும் குடிநீர்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஐதராபாத்:
தெலங்கானா மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி “தெலுங்கான மாநிலம் உருவாகி இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆனாலும், அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தண்ணீரை சேமிப்பது அனைத்து குடிமக்களின் கடமை. தண்ணீர் சேமிக்கப்பட்டால், அனைவரும் பயன்பெற முடியும்.” என்று மோடி தெரிவித்தார்.
மேலும், தெலுங்கானாவில் 10,599 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக உள்ள அனல்மின் நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். என்.டி.பி.சி. நிறுவனம் இங்கு இரண்டு கட்டமாக இந்த அனல்மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது.
முதல் கட்டமாக 1600 மெகாவாட் திறன் கொண்ட நிலையத்தையும் இரண்டாவது கட்டமாக 2400 மெக வாட் திறன் கொண்ட நிலையத்தையும் என்டிபிசி நிறுவனம் அமைக்க இருக்கிறது.
இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
தெலங்கானா மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி “தெலுங்கான மாநிலம் உருவாகி இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆனாலும், அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தண்ணீரை சேமிப்பது அனைத்து குடிமக்களின் கடமை. தண்ணீர் சேமிக்கப்பட்டால், அனைவரும் பயன்பெற முடியும்.” என்று மோடி தெரிவித்தார்.
மேலும், தெலுங்கானாவில் 10,599 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக உள்ள அனல்மின் நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். என்.டி.பி.சி. நிறுவனம் இங்கு இரண்டு கட்டமாக இந்த அனல்மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது.
முதல் கட்டமாக 1600 மெகாவாட் திறன் கொண்ட நிலையத்தையும் இரண்டாவது கட்டமாக 2400 மெக வாட் திறன் கொண்ட நிலையத்தையும் என்டிபிசி நிறுவனம் அமைக்க இருக்கிறது.
இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X