என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை மார்ச் 20-ம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளார். #Parliamentelection #MKStalin

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    மனுதாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

    29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மோதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற முழு விவரம் தெரிந்து விடும்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய 4 கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் அடைந்துள்ளனர்.

    வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருப்பவர்கள், தங்களது மனுதாக்கலை இந்த வாரமே முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். 21-ந்தேதி பங்குனி உத்திரம் சிறந்த தினமாக இருப்பதால் அன்று நிறைய பேர் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    மனுத்தாக்கலை முடித்து விட்டு பிரசாரம் செய்ய சுமார் 20 நாட்களே இருப்பதால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாகியுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் ஆளாக சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடும் மு.க.ஸ்டாலின் உடனடியாக நாளை மறுநாளே (20-ந்தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார்.

     


    மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை நடத்த உள்ளார். முதல் கட்ட பிரசாரத்தை திருவாரூரில் 20-ந்தேதி தொடங்கும் அவர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவு செய்கிறார். ஒருநாள் கூட இடைவெளியின்றி அவர் 18 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 18 நாட்களில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 28 பாராளுமன்றத் தொகுதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார். அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு:-

    காலை 10 மணி- நாகை பாராளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- தஞ்சை பாராளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறியில் பொதுக்கூட்டம்.

    காலை 10 மணி- சேலம் பாராளுமன்ற தொகுதி, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி - தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டம்.

    காலை 10 மணி - தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி - வட சென்னை பாராளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி, இடம்: பெரம்பூர்.

    காலை 10 மணி- காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி, இடம்- திருக்குழுக்குன்றம்.

    மாலை 5 மணி - திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி, இடம்-ஆவடி.

    மாலை 5 மணி - திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

    காலை 10 மணி- தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி - தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி.

    காலை 10 மணி - மதுரை பாராளுமன்ற தொகுதி, மாலை 5 மணி - விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி.

    காலை 10 மணி - சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதி.

    காலை 10 மணி - வேலூர் பாராளுமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி.

    மாலை 5 மணி- வேலூர் பாராளுமன்ற தொகுதி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை 10 மணி - அரக்கோணம் பாராளுமன்ற தெகுதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.

    மாலை 4 மணி- நீலகிரி பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - திருப்பூர் பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - கோவை பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - ஈரோடு பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - கரூர் பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி - ஆரணி பாராளுமன்றத் தொகுதி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் 2-வது கட்ட பிரசாரத்தை 7-ந்தேதியே தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் 16-ந்தேதி நிறைவுபெறுகிறது. எனவே மு.க.ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரத்துக்கு 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 10 நாட்களே அவகாசம் உள்ளது.

    இந்த 10 நாட்களில் மீத முள்ள பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில் ஆதரவு திரட்ட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். #Parliamentelection #MKStalin

    ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து டி.டி.வி.தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். #LSPolls #AMMK #TTVDhinakaran #Jayalalithaa
    சென்னை:

    டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அ.ம.மு.க. தனித்தே சந்திக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை ஜெயலலிதா தனித்தே சந்தித்தார். அவரது பாணியில் இந்த பாராளுமன்ற தேர்தலை தினகரன் தனித்து சந்திக்கிறார்.


    அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையிலும் தினகரன் தனித்தே களம் இறங்கியுள்ளார். திட்டமிட்டபடி பிரசாரத்தை தொடங்கி மக்களையும் சந்தித்து வருகிறார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களையும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களையும் தினகரன் நேற்று அறிவித்தார். ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அரசியலில் ஜெயலலிதா பாணியை தினகரன் மட்டும்தான் பின்பற்றுகிறார். தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். பல நேரங்களில் அவருக்கு உகந்த எண்ணாக 9 போன்ற ஒற்றை இலக்க எண்ணை தேர்வு செய்வார். அதன்படி தினகரனும் ராசி பார்த்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக தலா 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டார்.

    சிறிது நேரம் கழித்து 15 பேர் கொண்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் 2-வது பட்டியலை அறிவித்தார்.

    ஜெயலலிதா போலவே தினகரனுக்கும் ஆன்மீகத்தில் நம்பிக்கை உண்டு. ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை முதன் முதலில் அறிவிப்பது போன்று தினகரனே முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #AMMK #TTVDhinakaran #Jayalalithaa
    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜுக்கு எதிராக 7 தொகுதிகளில் போட்டி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. #Samajwadi #BahujanSamajParty #congress

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சியை இந்த இரு கட்சிகளும் தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க., சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் எதிர்த்து போட்டியிட மாட்டோம் என்று அகிலேஷ்-மாயாவதி இருவரும் அறிவித்தனர். அதன்படி அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்தும் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்தும் அவர்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

    நட்பின் அடிப்படையில் இந்த முடிவை முன்பு முலாயம்சிங் யாதவ் மேற் கொண்டார். தற்போது அதை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பின்பற்றியுள்ளனர்.


    இந்த நிலையில் அகிலேசுக்கும், மாயாவதிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கூறியதாவது:-

    சோனியா, ராகுலை எதிர்த்து சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. எங்களுக்கிடையிலான இந்த நட்பு, நல்லுறவு தொடர்கிறது.

    அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது. அவரது மருமகள் டிம்பிள் போட்டியிடும் கன்லோஜ் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்.

    அதுபோல முலாயம்சிங் யாதவ் உறவினர் அக்‌ஷய் யாதவ் போட்டியிடும் பைரோசாபாத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாது.

    இவ்வாறு ராஜ்பப்பர் கூறினார். #Samajwadi #BahujanSamajParty #congress

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் 20-ந்தேதி வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-



    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வில் கமல்ஹாசன் தீவிரமாக இருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் யார் என்று சொந்த தொகுதியிலேயே கேட்கும் அளவுக்கு பிரபலம் இல்லாதவராக கூட இருக்கட்டும். ஆனால் தகுதியும் நேர்மையும் தான் முக்கியம் என்று உறுதியாக இருக்கிறார். அதனால் தான் நேர்காணலில் அவரே நேரடியாக பங்கேற்றார். அதுவும் காலையில் இருந்து நள்ளிரவு வரை நேர்காணல் செய்தார்.

    மற்ற கட்சிகளில் நேர்காணல் செய்பவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் முக்கிய பொறுப்பாளர்கள்தான் நேர்காணல் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் கமல் கட்சியில் ஒரு பக்கம் கட்சிக்காரர்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் இருந்தனர்.

    பொதுவாக ஒரு கட்சியின் நேர்காணலில் முதல் கேள்வியே “எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க?” என்பதுதான் இருக்கும். ஆனால் கமல் கட்சியில் அப்படி இல்லை. “மக்களுக்கான நற்பணிகள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள், உங்கள் தொகுதி பிரச்சனைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா?” இதுதான் முதல் கேள்வியே. இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது.

    வேட்பாளர்கள் பதில்கள் சொல்ல சொல்ல, அதை அங்கு இருக்கும் குழுவினர் உடனடியாக குறித்து வைத்து கொண்டார்கள். கமலும் கையில் ஒரு பேனா வைத்து கொண்டு அதை குறிப்பெடுத்தார்.

    இது நேர்காணல் போலவே இல்லை. ஏதோ ஒன்றாக உட்கார்ந்து கலந்துரையாடுவதை போல இருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் இது புதுமை.’

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க. சார்பில் அண்ணன்-தம்பி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். #ADMK #DMK

    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தம்பியும், தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் லோகிராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 1987-ம் ஆண்டு முதல் கட்சியில் பணியாற்றி வரும் இவர் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், யூனியன் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 1973-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஆண்டிப்பட்டி யூனியன் பெருந்தலைவராகவும் இருந்துள்ளார்.

    தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத புதுமையாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதி.மு.க. - தி.மு.க. சார்பில் எதிர்எதிர் அணிகளில் அண்ணன், தம்பி களத்தில் மோதுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #DMK

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP
    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறது.

    கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேசிய கட்சியான பா.ஜனதா வேட்பாளர்களை டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும்.

    எனவே தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தமிழக நிர்வாகிகள் தயாரித்துள்ளனர்.



    இந்த பட்டியலுடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி தலைவர் அமித்ஷாவிடம் பட்டியலை ஒப்படைக்கிறார். கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டியலை வெளியிடாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்கள். கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோருக்கு சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    தூத்துக்குடியில் தமிழிசை, ராமநாதபுரத்தில் நயினார்நாகேந்திரன் அல்லது குப்புராம் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி தமிழிசையிடம் கேட்டபோது கட்சி அதிகாரப் பூர்வமாக எப்போது யாரை அறிவிக்கிறதோ அதன்பிறகு தான் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும் என்றார். #LSPolls #BJP
    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லபடுவதை தடுக்கும் பொருட்டு நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரவாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காட்பாடி வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (வயது 44) என்பதும் காண்ட்ராக்ட் தொழில் செய்வதும் தெரியவந்தது.

    தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர்.  #LSPolls

    தொண்டி சோதனைச் சாவடியில் கேரள மீன் வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls

    தொண்டி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் பணம் கொண்டு செல்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் கொண்டு செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் ராமசாமி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்தவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே ரூ. 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்தவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஆண்டோ (45) என்பது தெரியவந்துள்ளது. #LSPolls

    பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #LSPolls
    சென்னை:

    பண்டிகை, திருவிழா காலங்களில் மதுவிற்பனை அதிக அளவில் இருக்கும்.

    தேர்தல் காலங்களிலும் மதுவிற்பனை சூடுபிடிக்கும். மது குடிப்பவர்களால் அடிதடி, தகராறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    எனவே இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மதுபாட்டில்களை ஸ்டாக் வைப்பதற்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய கட்டுப்பாட்டின்படி ஒருவர் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் போன்ற மது பாட்டில்களை வாங்க சென்றால் அவர் 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 2 பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதுபோல் 650 மில்லிலிட்டர் அளவுகொண்ட 4 பீர் பாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும்.

    தற்போது 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 12 மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். இனி இதுபோன்ற 4 மதுபாட்டில்களை மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும். குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட 12 ஒயின் பாட்டில்களை வீட்டில் வைக்கலாம்.

    உயர் ரக மதுபானங்கள் வாங்குவோருக்கு ஒரே நேரத்தில் 5 முழுபாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும். இவர்களுடைய விவரங்கள் அட்டை எண் ஆகியவை பதிவு செய்தபிறகே இதை வாங்கலாம். வழக்குப்பதிவு நெருங்கும்போது இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகும். வழக்குப்பதிவு நாளில் மதுக்கடைகள் மூடப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. மதுவிற்பனை கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மதுபான விற்பனை, இருப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தல் போன்றவற்றை கண்காணிப்பார்கள். இந்த தகவல்களை டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #LSPolls
    ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார். #ParliamentElection #Roja
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    அடுத்த மாதம் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார்.

    அதே நேரத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார்.

    இந்தநிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “வேட்பாளர் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 41 இடங்களும், சிறுபான்மையினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்தினருக்கும் ‘சீட்’ வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என கூறினார்.



    வேட்பாளர் பட்டியலின்படி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.

    முதல்-மந்திரி என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    நடப்பு சட்டசபையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மருமகன் தக்குபட்டி வெங்கடேஸ்வரராவ், புர்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு (தெலுங்குதேசம்) எதிராக இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடுகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 2 பேருக்கு மட்டும் இப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23 தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லூர் தொகுதி எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் தொகுதி எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகிய இருவருக்கும் மீண்டும் களம் காண வாய்ப்பு தரப்படவில்லை. #ParliamentElection #Roja

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். #LokSabhaElection #Tamilnadu
    சென்னை:

    இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே ஏப்ரல் 18-ந் தேதி நடக்க உள்ளது. அந்த தொகுதிகளுக்கும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை தொகுதிக்கு சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திவ்யதர்ஷினியும், தென்சென்னை தொகுதிக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசும், மத்திய சென்னை தொகுதிக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கென தனியாக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு செனாய்நகர் புல்லா அவென்யூ, 2-வது குறுக்கு தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

    பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வியாசர்பாடி சர்மாநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்களில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 
    சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK
    சென்னை:

    அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

    பூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும், 

    அரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும்,  தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும்  போட்டியிடுகின்றனர். #ByPoll #ADMK
    ×