என் மலர்
தேர்தல் செய்திகள்




சென்னை:
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள்.
அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேர் மனு கொடுத்து உள்ளனர். கிருஷ்ணகிரி- 15, ஆரணி- 36, கரூர்- 17, திருச்சி- 25, சிவகங்கை, தேனி- 18, விருதுநகர்- 12, கன்னியாகுமரிக்கு 54 பேர் மனு கொடுத்துள்ளார்கள். விருப்பமனுவை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கும் பணி இன்று நடந்தது.
காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சைதத், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், மற்றும் குஷ்பூ, செல்வப்பெருந்தகை, ஆரூண், கே.ஆர். ராமசாமி, டாக்டர் செல்லக்குமார் உள்பட 26 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்தனர்.
இந்தப் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. டெல்லி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு நாளில் அறிவிக்க உள்ளது.
தேனி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி ஆரூண் வாய்ப்பு கேட்டுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான அசன் ஆரூணும் மனு கொடுத்துள்ளார் ஒரே தொகுதிக்கு தந்தையும், மகனும் வாய்ப்பு கேட்டு இருப்பது ருசிகரமாக அமைந்துள்ளது. #Congress
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று காலை நடைபெற்றது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, தொகுதி நிலவரம், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.
யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
18 தொகுதிக்கும் மொத்தம் 311 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நேர்காணலில் பங்கேற்றனர்.
நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பதை நேரடியாக தெரிவிக்காமல் கட்சி நிறுத்தும் வேட்பாளரை கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெற செய்யபாடுபட வேண்டும் என்று பொதுவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.
நேர்காணல் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் யாரும் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு வெற்றிதான் முக்கியம். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். #ADMK

சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் பா.ஜனதாவும் இடம் பெற்று இருப்பதால் த.மா.கா. நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் கே.கே.குருசாமி கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் நீக்கினார்.
இதையடுத்து குருசாமி தனது ஆதரவாளர்கள் 150 பேருடன், பஸ்களில் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.பி. மாணிக்க தாகூர் செய்திருந்தார். #tamilmaanilacongress #congress #gkvasan
ஈரோடு:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக கூட்டணி தொகுதிகள் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி என்பது ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடையும், தமிழக வளர்ச்சிக்கான கூட்டணியாக உள்ளது மக்கள் நம்பிக்கை உடைய கூட்டணியாக நாங்கள் உள்ளோம்.
எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் அறிக்கையும் இருக்கும். தமாகா சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். வேட்பாளர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஆக இருப்பார்.
எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்காமல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்து உள்ளோம். தஞ்சாவூர் தொகுதி வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அதுபோக 38 தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்கள் கட்சி கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள்.
த.மா.கா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நீதிமன்றத்தை அணுகி முதற்கட்டமாக சைக்கிள் சின்னத்தை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை நாங்கள் அணுகி சைக்கிள் சின்னம் பெற வலியுறுத்துவோம். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் கண்மூடித்தனமாக குறைகளையும் ஆட்சியாளர்கள் பற்றிய தவறான தகவலைக் கூறி வருகிறார்கள் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை அதிமுக சாமானியர்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது முதல்வரும் துணை முதல்வரும் சாமானிய மக்களின் தலைவராக உள்ளனர்.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் கண்டிக்கத்தக்கது மிகவும் வருந்தத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இதனை சிலர் அரசியலாக்குவது மக்கள் நம்ப மாட்டார்கள் அதேபோன்று பொள்ளாச்சி சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஏன் இந்தியாவில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தற்போது சிபிஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது நல்ல விஷயமாகும் என்னை பொருத்தவரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தான் வழங்க வேண்டும். என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #parliamentelection
அப்போது லாரியில் பெட்டி பெட்டியாக கவரிங் நகைகள் இருந்தன. ஆனால், பறக்கும் படையினரால் அது கவரிங் நகைகள் என்று உடனடியாக கண்டறிய முடியவில்லை. தங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்பியது. அதற்குள் பெட்டி பெட்டியாக தங்க நகைகள் பறிமுதல் என்ற செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.
இதற்கிடையில் பறக்கும் படையினர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பெட்டி பெட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், கலெக்டர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, லாரியில் இருந்த பொருட்களை நகை மதீப்பிட்டாளர்களை வதை்து ஆய்வு செய்தார்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகளே!!! என்பது தெரிய வந்தது. மேலும், கடையின் பழைய பொருட்களும் இருந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.








