search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் மனு
    X

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் மனு

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள். #Congress

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேர் மனு கொடுத்து உள்ளனர். கிருஷ்ணகிரி- 15, ஆரணி- 36, கரூர்- 17, திருச்சி- 25, சிவகங்கை, தேனி- 18, விருதுநகர்- 12, கன்னியாகுமரிக்கு 54 பேர் மனு கொடுத்துள்ளார்கள். விருப்பமனுவை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கும் பணி இன்று நடந்தது.

    காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சைதத், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், மற்றும் குஷ்பூ, செல்வப்பெருந்தகை, ஆரூண், கே.ஆர். ராமசாமி, டாக்டர் செல்லக்குமார் உள்பட 26 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்தனர்.

    இந்தப் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. டெல்லி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு நாளில் அறிவிக்க உள்ளது.

    தேனி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி ஆரூண் வாய்ப்பு கேட்டுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான அசன் ஆரூணும் மனு கொடுத்துள்ளார் ஒரே தொகுதிக்கு தந்தையும், மகனும் வாய்ப்பு கேட்டு இருப்பது ருசிகரமாக அமைந்துள்ளது. #Congress

    Next Story
    ×