என் மலர்
தேர்தல் செய்திகள்
சென்னை:
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பன் முகத்தன்மை மத சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு நிரந்தர உத்தரவாதமாகத் திகழும் காங்கிரஸ் பேரியக் கத்தின் சிறப்பான பணியினை இந்திய மக்களின் நல் இதயங்களை விட்டு என்றும் எந்த சக்தியும் நீக்கிவிட முடியாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் 44 மக்களவை எம்பி.க்களை பெற்று பா.ஜனதாவை எதிர் கொண்டோம். தற்போது 52 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் நாம் நாள் தோறும் பா.ஜனதாவை எதிர்த்து போராடுவோம்.

நீங்கள் (எம்.பி.க்கள்) ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு இந்திய மக்களுக்காக போராடுகிறீர்கள். வெறுப்புணர்வை தூண்டுபவர்களும், கோபத்தை ஏற்படுத்துபவர்களும் உங்களை எதிர்த்து நிற்கிறார்கள். இதனால் நீங்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும்.
கட்சியை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். நாம் கடும் முயற்சி செய்து புத்துணர்வு அடைவோம். நம்மால் அதை செய்ய முடியும்.
எம்.பி.க்கள் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட சோனியாவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.




ஆலந்தூர்:
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.
இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.
இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,
‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.







