search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறன் போட்டிகளுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
    X

    திறன் போட்டிகளுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

    • மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் ஜீலை-2023-ல் நடைபெற உள்ளது.
    • திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகின்ற 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பள்ளி,கல்லூரி படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் ஜீலை-2023-ல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படும்.

    மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, உலகத் திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் 2024 -ம் ஆண்டு நடைபெற உள்ளது.

    மாநில அளவில் வெற்ற பெற்றவர்களுக்கு மிகச்சிறந்த நிறுவனத்தில் பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவினத்தை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் naanmudhalvan.tn.gov.in./tnskills என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு tnskills@naanmudhalvan.in. என்ற வலைதளத்தினை பார்வையிடலாம்.

    10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகின்ற 30-ம் தேதி கடைசி நாள் என்பதால் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×