search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் மாயம்
    X

    பெண் மாயம்

    • பென்னாகரம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் கூர்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி முத்தமிழரசி (வயது29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    மணிவண்ணன் ஆந்திராவில் சிப்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தமிழரசி தனது செல்போன் பழுதாகி விட்டதால் அதனை சரி செய்ய பென்னாகரம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மகன் முத்தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    இதுகுறித்து கணவர் மணிவண்ணன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்தமிழரசியை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×