search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் வைகையாற்றில் தவறிவிழுந்து பெண் பலி
    X

    கோப்பு படம்

    குன்னூர் வைகையாற்றில் தவறிவிழுந்து பெண் பலி

    • வைகையாற்றின் ரெயில்வே பாலம் அருகில் பெண் இறந்து கிடந்தார்.
    • அவர் எவ்வாறு இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் துரைச்சாமிபுரம் மேற்குதெருவை சேர்ந்த பொன்னையா மனைவி கருப்பாயம்மாள்(65). கணவர் இறந்துவிட்டதால் மகன் மற்றும் மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    உடல்நிலை சரியில்லாததால் மனவேதனையில் இருந்தார். சம்பவத்தன்று வீரபாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார்.

    அவரை தேடிச்சென்று பார்த்தபோது குன்னூர் வைகையாற்றின் ரெயில்வே பாலம் அருகில் இறந்து கிடந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×