என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
    • வாலிபர் காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

    திருவெண்ணெய்நல்லூர்:

    விழுப்புரம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த என்ஜினீயரிங் மாணவி குடும்பத்துடன் தலை மறைவாகிவிட்டார்.

    விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் பிளஸ்-2 வரை படித்து விட்டு, தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய மாணவி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வருகிறார்.

    இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. காதலுக்கு வாலிபர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    ஆனால் வாலிபரோ, இனிமேல் பேசவும் மாட்டேன், உன்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் மாணவி, தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அப்போது, இருவரில் (காதலன்-காதலி) யாரேனும் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று யோசனை கூறியுள்ளனர்.

    அதன்படி காதலனை தனது வீட்டிற்கு மாணவி அழைத்தார். அவரும் அங்கு சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாணவி, தனது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார்.

    அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. அப்போதுதான் அந்த மாணவி, டீயில் எலி மருந்து (விஷம்) கலந்து கொடுத்ததாக கூறினார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதனிடையே காதலனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்மூலம் மாணவி தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

    இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.

    இதனால் யாரிடம் விசாரணை நடத்துவது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

    • ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
    • ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலனை தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக திருமணம் செய்து கொள்ள ஜெயசூர்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ஜெயசூர்யாவுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இந்நிலையில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என வாட்ஸ் அப்பில் காதலி அனுப்பிய மெசேஜை பார்த்து பதறிய ஜெயசூர்யாவின் பெற்றோர் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் காதலி ரம்யா, அவரது பெற்றோர் தலைமறைவு ஆகியுள்ளனர். 

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
    • தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியிலிருந்து 13-நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இரவு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ளஅம்மனுக்கும், சிவபெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு மயானத்தை நோக்கி அம்மன் புறப்பட்டு மயானத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை , காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலக்குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • நாளை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மேலும் காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    அதாவது சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதிதேவி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை மயானத்தில் மிதித்து சிவனுக்கு சாப விமோசனம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை விழா நடை பெறுகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் கோவில் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன் பின்னர் அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாளை இரவு வழக்கமாக அமாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி பள்ளி சிறுமியை 18 வயது இளைஞர் திருமணம் செய்தார்.
    • 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் இளைஞரிடம் பேசியது தெரியவந்துள்ளது

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த கார்த்திக்குமார் (18) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 16 வயது பள்ளி சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் செல்போன் எண்னை ஆய்வு செய்தனர்.

    அதில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 வயதான கார்த்திக் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.

    இதனையடுத்து கார்த்திக் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அப்போது தான் அந்த சிறுமியை இளைஞர் திருமணம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
    • கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும்.
    • மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் புதுவை சாலை, சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சரும் மாநில தி.மு.க. துணை பொது செயலாளருமான பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், வன்னியர் அறக்கட்டளை உறுப்பினருமான அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனூர் சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    மருந்தக விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும். அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது. மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள்.
    • இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றபோது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த முறை சீமான் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த மனு தள்ளுபடி செய்யபட்டதால் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மும்மொழிக்கொள்கை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும்.

    மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசின் நிதி. இது நாட்டின் பொதுவுடைமையாக இருக்கும் இறையாண்மைக்கு நேர் எதிர்மறையானது. இந்தியா ஒருமைப்பாடு மிக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் எல்லா மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.

    என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுப்போம் என்பது திமிறு. இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற தேவை என்ன இருக்கிறது. இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா. மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து இருப்பதாகவும், தாய் மொழி தமிழ் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம்.

    வேறொரு மொழியை கற்க நாடோடி கூட்டமாக வாழ வைக்க நினைக்கிறீர்களா. நடிகர் சரத்குமார் அனைத்து மொழிகளும் பேசுகிறார். விரும்பினால் எந்த மொழி வேண்டுமானாலும் கற்போம்.

    மரத்தின் வேர் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்பதும் ஒரு மொழி என்பதும் கொடுமையானது. அது தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்கிறோம். கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்றால் அதை செய்ய முடியாது. மும்மொழிக்கொள்கை மோசடி கொள்கை. கொள்கை மொழி அவரவர் தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அப்படி அந்த தேர்வில் தோல்வி பெற்றால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா.

    ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. தமிழக அரசு கோழை கூடார கூட்டமாக உள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள். எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி என்பார்கள்.

    கல்வி மாநிலத்தின் உரிமை. மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்க வேண்டும் என்ற உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை காரணம் கூற வேண்டும்.

    இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம். தமிழ் தான் பூர்வகுடி மக்கள். இந்தி தேவை என்றால் மட்டுமே கற்று கொள்வோம். அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் கல்வி பயிலவில்லை என கூறுகிறார்.

    தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைக்களாக போராடி வருகின்றனர். நல்லாட்சி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா. ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து வாக்கு சேகரிக்கவில்லை. பாலியல் வன்கொடுமை, மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை தடுத்த வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பா என்னப்பா இப்படி பண்றீங்களே என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
    • இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    மும்மொழி கொள்கை தொடர்பாக நா.த.க. வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்.

    * கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். பயன்பாட்டு மொழி ஆங்கிலம் தெளிவாக எழுதி இருக்கிறேன்.

    * உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழிகள். இந்தி உட்பட விரும்பினால் கற்போம் என்று போட்டுள்ளேன்.

    * இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?

    * தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தோர் தமிழ் பேசும் நாகர்கள் என்றார் அம்பேத்கர்.

    * தேவை என்றால் இந்தி படிக்கிறோம். உணவு, மொழி, உடை எல்லாம் அங்கங்கு வாழுகின்ற கால சூழல் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.

    • மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
    • உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.

    * ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.

    * இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?

    * உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    * மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?

    * எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
    • இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

    முன்னதாக, கடந்த 2019-ல் விக்கிரவாண்டி சட்டசபை உறுப்பினராக இருந்த ராதாமணி இறந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
    • செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?

    விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் பேசியதாவது:

    * பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.

    * இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு.

    * சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.

    * சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள்.

    * செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா? என்று அவர் பேசினார்.

    ×