என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்.
    • திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், திண்டிவனம் அருகே மறைந்த கட்சிநிர்வாகி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.

    திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    • அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான்.
    • என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்த சாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் 21 சமூக போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து 21 சமூக நீதி போராளிகளின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், ராஜேந்திரன் மற்றும் ஏ.கே.கோவிந்தசாமியின் மகனும், பா.ஜ.க. மாநில துணைத்தலைவருமான ஏ.ஜி.சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ. கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைத்த நிகழ்வாகும். 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரசாரத்துக்கு வந்த என்னிடம் அமைச்சர் பொன்முடி, அன்னியூர் சிவா ஆகியோர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது கோரிக்கை வைத்தவர்களிடம் நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்தேன். அதன்படி ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாததாகும். மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ. கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.

    21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு உருவாக்கப்பட்டு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதாமாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது, வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில்தான்.

    தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்திற்கான தேவைகள் கண்டறியப்பட்டது.

    அதன்படி நந்தன் கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ. 2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்.

    நிதி இல்லாவிட்டாலும் மக்களின் கோரிக்கையை தீர்க்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டிருப்பார்கள். அது ஆட்சியின் மீதான குறை அல்ல. எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி சோர்ந்து விட்டனர். தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சென்றுள்ளேன். ஆனால் அதிக திட்டங்களை பெற்றது விழுப்புரம் மாவட்டம்தான். நேற்று இரவு மாவட்ட கலெக்டர் பழனியுடன் ஆய்வு நடத்தினேன். அப்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டறிந்து கொண்டேன். விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    • நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.
    • விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 231 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    வீரத்தின் விளைநிலம் விழுப்புரம் மாவட்டம். வரலாறு பெருமை கொண்டது விழுப்புரம் என்று பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம்.

    * விழுப்புரத்தின் பெருமையை பற்றி பேச நாளும் பொழுதும் பத்தாது.

    * கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் நினைவாக மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * வாழ்நாள் எல்லாம் எண்ணி பெருமைபடும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

    * தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஏ. கோவிந்தசாமி.

    * தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று முதலில் வென்றவர் ஏ.கோவிந்தசாமி.

    * வன்னிய சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * இன்றும் துடிப்பு மிக்க போராளியாக திகழ்பவர் பொன்முடி.

    * அதிமுக ஆட்சியில் காக்கை, குருவிகளை போல் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.

    * இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பென்சன் வழங்கியவர் கலைஞர்.

    * ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியில் தான்.

    * சமூகநீதியை நிலைநாட்டுவது தான் திராவிட இயக்கத்தின் நோக்கம்.

    * சொன்னபடியே 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * பிற்படுத்தப்பட்டோர் இன்று முன்னேறுவதற்கு கருணாநிதியை காரணம்.

    * சமூகநீதி அகில இந்திய அளவில் போராடி வருவதும் திமுக தான்.

    * நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.

    * விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * சாத்தனூர் அணையின் உபரிநீர் நந்தன் கால்வாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சாத்தனூர் அணை உபரிநீருக்காக ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய்திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * சங்கரபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.

    * விக்கிரவாண்டி பேரூராட்சியில் பல்நோக்கு சமுதாய கூடம் அமைக்கப்படும்.

    * செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

    * ரூ.5 கோடியில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்க திட்டம்.

    * நிதி மட்டுமே தடையாக உள்ளது, வேறு எந்த தடையும் எங்களுக்கு இல்லை.

    * குறை சொல்வது எதிர்க்கட்சி தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறைபாடு

    * எந்த பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

    * நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது அல்ல நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே எனது இலக்கு.

    * நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதை அடையவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றார். 

    • முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் முதலமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரோட் ஷோ மூலமாக சாலைகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திண்டிவனம் பகுதியில் கோரிக்கை மனுவை பெற்றார்.

    இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரி வரை சாலையில் நடந்தே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்து கொண்டார்.

    அப்போது முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுதிறனாளிகள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என பலதரபட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றபோது பெண் ஒருவர் செல்பி எடுக்க கேட்டு கொண்டதின் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக்கொண்டு பெண்ணிடம் செல்போனை கொடுத்தார்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், விவசாயிகள், வக்கீல்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முதலமைச்சர் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

    • ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை வழங்கினர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷாமிட்டல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
    • விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



    மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
    • சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று மாலை வருகிறார். இன்று மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பொன். கவுதமசிகாமணி, டாக்டர் சேகர் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை வந்து (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.

    அதன் பின்னர் அந்த திருமண மண்டபத்தில் நடைபெறும் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அங்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ. 5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விழா பந்தல் மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இந்த திராவிட மாடல் ஆட்சியை யாரால் தொட்டு கூட பார்க்க முடியாது.
    • தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியாரை சொல்லி திமுக வாக்கு கேட்குமா இல்லை காந்தி நோட்டுகளை கொடுத்து வாக்கு கேட்குமா? என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம் சீமான் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த பொன்முடி, "பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல இடங்களில் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    Duplicate போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான். திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி இந்த இரண்டும் இணைந்தும் செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    இந்த திராவிட மாடல் ஆட்சியை யாரால் தொட்டு கூட பார்க்க முடியாது. தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார்" என்று தெரிவித்தார். 

    • மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
    • பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கினாலும் இடையில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி பயணிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது அக்கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், நான் தெளிவாக சொல்கிறேன்.. யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காக பணம் கொடுப்பவர்கள் என்றாலும் பணம் வாங்கினார்கள் என்றாலும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது.
    • புகைப்பட சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, ‘அத விடுங்க' என சீமான் பதில் கூறாமல் தவிர்த்தார்.

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்ககிரி ராஜ்குமாரின் இந்த குற்றச்சாட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அந்த கேள்விக்கு, 'அத விடுங்க' என சீமான் பதில் கூறாமல் தவிர்த்தார்.

    இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசிய சீமான், "பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என ஒருமுறை பேசி பாருங்கள்.

    பெரியாரை சொல்லி வாக்கு வாங்க போகிறீர்களா? காந்தி படத்தினைக் காட்டி வாக்கு வாங்க போகிறீர்களா? கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்து வாக்கை பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது" என்று தெரிவித்தார்.

    • கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசினார்.
    • ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.

    மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

    அதிலும் குறிப்பாக, "ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது" என்று மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கோமியம் சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம். மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் உயர்ந்த சாதி. இது தான் இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கபடுகிறது" என்று தெரிவித்தார்.

    ×