search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பாடம் தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
    X

    புதிய பாடம் தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி

    • வேலைவாய்ப்புத் திறன் குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    வேலூர்:

    மேல்நிலை வகுப் புகளில் தொழிற்கல்வி பாடப் பிரி வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன் புதிய பாடம் தொடர்பாக, வேலூர் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    வேலூர் எஸ்எஸ்ஏ அலுவல கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற் சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட கருத்தாளர் கள் கே.பழனி, செ.நா.ஜனார்த்த னன், க.ராஜா, கா.பா.சிவஞானம், எம்.நாகலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    முது நிலை ஆசிரியர்கள் ஜி.பூபதி, லீலா கிருஷ்ணன், கணினிப் பயிற்றுநர் மா.முருகன் ஆகியோர் பாடப் பொருள்கள் குறித்து விளக்கிப் பேசினர். தொழில்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தொழில் துறை களில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புத் திறன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட் டுக் கழகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற தொடர்புடைய துறை திறன் கழகங்கள் மூலம் நடைமுறை மதிப்பீட்டுக்கான திறன் சான்றிதழ் ஒவ்வொரு மாணவருக்கும் வழங் கப்படும்.

    தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் கல்வி யாண்டிலிருந்து வேலைவாய்ப்பு களை உருவாக்குபவர்களாக உருவாக்குவதே இந்த பாடத்தின் அடிப்படை நோக்கம். இதன்மூலம், மாண வர்கள் தங்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை அடையாளம் காண முடியும்.

    மாணவர்கள் ஆங்கில மொழித் திறன், தகவல் தொடர்புத் திறன், கணினி தகவல் தொடர்பு, தொழில் முனைவோர் திறன், 21-ஆம் நூற்றாண்டுத் திறன்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வர் என்றும் தெரி விக்கப்பட்டது.

    முன்னதாக, உதவித் திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம் வரவேற்றார். ப் உதவியாளர் கோபி நன்றி கூறினார்.

    Next Story
    ×